ஸ்ரீ ஆதிசங்கரர் தொழிற்பயிற்சி நிலையமானது (ITI) ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டு சீறிய வளர்ச்சியடைந்து தொழிற்கல்வி பணியில் 31ம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கிறது.

இத்தொழில் பயிற்சி நிலையமானது ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி நிறுவனங்களின் தலைவர் “வித்யா ரத்னா” டாக்டர் ஆ. செந்தில்நாதன் M.Sc., M.Phil., Ph.D., அவர்களின் தலைமையில் திறம்பட நடைபெற்று வருகிறது.

இங்கு பயிற்சிபெறும் அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் பயிற்சியின் முடிவில் முன்னனி நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சியும் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகின்றது.

மத்திய மாநில அரசினால் நிரந்திர அங்கீகாரம் பெற்றது அங்கிகார எண் (DGET NO. TC-6/22/132/93-Tc). ISO Certified 29990 : 2010 ***** நட்சத்திர அந்தஸ்து NCVET இந்திய அரசால் வழங்கப்பட்டது. இப்பயிற்சி நிலையமானது ஸ்ரீ ஆதிசங்கரர் ITI செக்போஸ்ட் அருகில் திருவானைக்கோயில் திருச்சி – 5 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இங்கு 10ம் வகுப்பு / +2 தேறிய/தவறிய மாணவ/மாணவிகளுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் NCVET 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கு மாநில அரசால் நடத்தப்பட்டு வருகின்ற அணைத்து கோர்ஸ்களும் திறம்பட நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ ஆதிசங்கரர் ITI ஆனது திருச்சி மாநகரின் மையப் பகுதியான திருவானைக்கோயிலில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் எழில் கொஞ்சும் கொள்ளிடக்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. ஆன்மீக நகரமாம் திருச்சியில் முக்கோண வடிவில் அமைந்திருக்கும் திருவானைக்கோயில் அருள்மிகு ஆகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம்ää ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாயகி சமேத அரங்கநாதர் ஆலயம் மற்றும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் ஆலயம் ஆகிய 3 திருக்கோயில்களுக்கு மத்தியில் நமது ஸ்ரீ ஆதிசங்கரர் தொழிற்பயிற்சி நிலையம் அமைந்திருப்பது மிக சிறப்பம்சமாகும்.

© Sri Adhisankarar ITI | Powered by : AGASOFT